Home இந்தியா ரபேல் பற்றிய விவாதம் நடத்த வேண்டிய இடம் நாடாளுமன்றமே…

ரபேல் பற்றிய விவாதம் நடத்த வேண்டிய இடம் நாடாளுமன்றமே…

by admin

ரபேல் பற்றி விவாதம் நடத்த வேண்டிய இடம் நாடாளுமன்றம். அங்குதான், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியின் சிரேஸ்ட தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தி வருகின்ற நிலையில், ப.சிதம்பரம் நேற்று செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த போது ரபேல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி, நீதிமன்றை அணுகுமா என்று கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினைக்கு நீதிமன்றம் தீர்வு அல்ல எனவும் எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்வது இந்தியாவில் ‘பேஷன்’ ஆகிவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரபேல் பற்றி விவாதம் நடத்த வேண்டிய இடம், நாடாளுமன்றம். அங்குதான், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருக்கிறார்கள். விவாதம் நடத்த மத்திய அரசு சம்மதிக்காவிட்டால், நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ரபேல் விமான கொள்முதலை ‘அவசர கொள்முதல்’ என்று மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தை போபர்ஸ் விவகாரத்துடன் ஒப்பிடக்கூடாது. ஏனென்றால், போபர்ஸ் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை என்று டெல்லி நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. ரபேல் விவகாரத்தில், சரியான பதில்கள் வராவிட்டால், இது ஊழல்தான் என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கும் என ப.சிதம்பரம் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More