Home இலங்கை இலங்கை போக்குவரத்து சபையின் போராட்டம் கைவிடப்பட்டது!

இலங்கை போக்குவரத்து சபையின் போராட்டம் கைவிடப்பட்டது!

by admin

நேற்று நள்ளிரவில் இருந்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மேற்கொண்ட பணிப் புறக்கணிப்புப் போராட்டம் இன்று கைவிடப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தினால் பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் பயணங்களை மேற்கொள்வதில் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருந்தனர்

இந்த நிலையில் இன்று நடைபெற்ற பேச்சுவாரத்தையில் சம்பள உயர்வுக்காக இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும், கடிதம் மூலம் இதற்கான உத்தரவாதம் தரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More