Home இந்தியா இந்தியப் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களில் இணையும் தனிநபர்களின் பட்டியலை வழங்குமாறு உத்தரவு…

இந்தியப் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களில் இணையும் தனிநபர்களின் பட்டியலை வழங்குமாறு உத்தரவு…

by admin


அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்கு இந்தியப் பிரதமர் செல்லும் போது பாதுகாவலர்கள் தவிர பயணம் செய்யும் தனி நபர்கள் குறித்த பட்டியலை தாக்கல் செய்யுமாறு மத்திய தகவல் ஆணையகம் உத்தரவிட்டுள்ளது.  பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வெளிநாடு செல்லும் போது பாதுகாப்பு அதிகாரிகள் மற்ற அதிகாரிகள் தவிர, பிரதமருடன் செல்லும் தனி நபர்கள் குறித்த விபரங்களை தர வேண்டும் என சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்திருந்தார்.

இந்த தகவல்களை வெளியுறவு அமைச்சகம் தர மறுக்கவே, மத்திய தலைமை தகவல் ஆணையாளரிடம் மேல்முறையீடு செய்தார்.  இதனையடுத்து , பிரதமருடன் விமானத்தில் பயணிக்கும் தனி நபர்கள் குறித்த பட்டியலை மனு தாரருக்கு வழங்க வேண்டும் என தலைமை தகவல் ஆணையாளர் மாத்தூர் வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More