Home இலங்கை கல்வியங்காட்டில் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

கல்வியங்காட்டில் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்ப்பாணம்- கல்வியங்காடு பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் 3 வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் நல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கல்வியங்காட்டு பகுதியில் உள்ள மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் மூவர் மீது தாக்குதல் நடத்தியதுடன் வீடுகளிலுள்ள பொருள்களையும் சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது.

ஒரு வீட்டில் குடும்பப் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மற்றொரு வீட்டில் தந்தை மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

கல்வியங்காடு ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை செல்வராசா (வயது 70) செல்வராசா சஜீபன் (வயது 25) பாலேந்திரன் சரோஜினிதேவி (வயது 61) ஆகிய மூவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவங்கள் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர்; மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More