Home இலங்கை யாழ் பல்கலையில் கறள்பிடித்த கைக்குண்டை சுற்றிவளைத பாதுகாப்பு படைகள்….

யாழ் பல்கலையில் கறள்பிடித்த கைக்குண்டை சுற்றிவளைத பாதுகாப்பு படைகள்….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருந்து பழுதடைந்த கைகுண்டு ஒன்றை ஊழியர்கள் கண்டு பிடித்து காவற்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவன் ஆலயத்திற்கு முன்பாக நிலத்தை தோண்டும் பணி இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே பழுதடைந்த கைகுண்டு ஒன்றை தோண்டும் பணியில் இருந்தவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து பல்கலைகழக நிர்வாத்திற்கு விடயத்தை தெரியப்படுத்தியதன் அடிப்படையில் காவற்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்லைகழகத்தில் தமிழமுதம்நிகழ்வு , தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் பொங்குதமிழ் நினைவுகல் திரை நீக்கம் செய்யும் நிகழ்வுகள் அடுத்து வரும் நிலையில் குறித்த பழுதடைந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கைக்குண்டு காணப்பட்டதை அடுத்து பல்கலை வளாகத்தினுள் பெருமளவான காவற்துறையினர் மற்றும் காவற்துறை அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலமையானது , பல்கலை மாணவர்கள் மத்தியில் ஒர் அச்சமான நிலைமையை தோற்றுவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More