Home இந்தியா தேர்வெழுதுவதற்கு, பெண்களின் தாலியை கழற்ற வைத்த அதிகாரிகள்…

தேர்வெழுதுவதற்கு, பெண்களின் தாலியை கழற்ற வைத்த அதிகாரிகள்…

by admin


தெலங்கானாவில் நடைபெற்ற அரச பணியாளர் தேர்வின்போது, பாதுகாப்புக் கருதி பெண்கள் அணிந்திருந்த தாலியை கழற்றி கணவர்மாரிடம் கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் அம்மாநில அரசுப் பணியாளர்கள் தேர்வாணையகம் (TSPSC) சார்பில், கிராம வருவாய் அதிகாரிக்கான தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடைப்பெற்றது.

700 வெற்றிடங்களுக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 2,000 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்ற நிலையில் நார்சபூரில் உள்ள ஒரு தனியார் பாடசாலையில் தேர்வெழுத சென்ற திருமணமான பெண்களிடமே இவ்வாறு தாலியைக் கழற்றினால் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்துக்களின் பாரம்பர்யத்தை எடுத்துக்கூறி, அந்தப் பெண்கள் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் தேர்வாணையகம் தெரிவித்துள்ள விதிமுறைகளின் படியே தாங்கள் செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்ததனையடுத்து பெண்கள் தங்களின் தாலியைக் கழற்றிவிட்டே தேர்வு எழுதியுள்ளனர்.

இதையடுத்து, தேர்வு மையத்தின் வெளியில் தங்கள் மனைவிகளின் தாலிச்சங்கிலியுடன் கணவன்மார்கள் போராட்டம் நடத்தினர். பெண்கள், தங்களின் தாலியில் சில இலத்திரனியல் டிவைஸ் வைத்திருக்கக்கூடும். அதன் உதவியுடன் தேர்வெழுதும் வாய்ப்புள்ளதால் தான் அனுமதிக்கவில்லை என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தச் சம்பவம் குறித்து டி.என்.பி.எஸ்.சி இயக்குநர் சக்கரபாணி கூறும்போது, தேர்வு எழுத வரும் பெண்கள் தாலியைக் கழற்ற வேண்டும் என தாங்கள் தெரிவிக்கவில்லை எனவும் விதிமுறைகளை தவறாகப் புரிந்துக்கொண்ட தேர்வு மைய அதிகாரிகள், இதுபோன்று செயல்பட்டு இருக்கலாம் எனவும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More