Home இலங்கை உயிருக்கு அச்சம் என்றால் அமெரிக்கா பிரஜாவுரிமை வைத்துள்ள கோத்தா நாட்டை விட்டு வெளியேறலாம்

உயிருக்கு அச்சம் என்றால் அமெரிக்கா பிரஜாவுரிமை வைத்துள்ள கோத்தா நாட்டை விட்டு வெளியேறலாம்

by admin


முன்னாள் பாதுகாப்புச் செய்லாளர் கோத்தபாய ராஜபக்ஸவுக்கு உயிருக்கு அச்சம் என்றால் கோத்தபாயவிடம் அமெரிக்காவுக்கான பிரஜாவுரிமை இருப்பதனால் அவர் நாட்டை விட்டு வெளியேற முடியும் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வடக்குக்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த சரத் பொன்சேகா, வவுனியாவின் நந்திமித்ரகம பகுதியில் வைத்து கடந்த சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறு தெரிவித்துள்ளர்h.

அதிக பாதுகாப்புக்குப் பெறுவதற்கு கோத்தபாய பொருத்தமற்றவர் எனவும் அமைச்சராகத் தான் உள்ள நிலையில், தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை விட, முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகமானது எனவும் அவர் குறிப்பிட்டள்ளார்.

தனக்கு, 17 காவல்துறையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் கோத்தபாயவுக்கு இராணுவம், விசேட அதிரடிப்படையினர், கொமாண்டோக்கள் என, 25 பேரின் பாதுகாப்பு உள்ளது எனசும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளாh

மேலும் இந்நாட்டைச் சேர்ந்த பலருக்கு, மரண அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றது எனவும் , அவர்கள் அனைவருக்கும், குண்டு துளைக்காத வாகனங்களை வழங்குவதாயின், நாட்டிலுள்ள பணம் போதாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More