Home இலங்கை மகிந்த காலை எழுந்ததும் ரணில் இருக்கும் திசையை நோக்கி வணங்க வேண்டும் :

மகிந்த காலை எழுந்ததும் ரணில் இருக்கும் திசையை நோக்கி வணங்க வேண்டும் :

by admin


யுத்தக் குற்றங்களுக்காக உள்ள ரோம் சாசனத்தில் 2002 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கையொப்பம் இடாத காரணத்தால்தான் இலங்கையின் எந்தவொரு குடிமகனையும் சர்வதேச நீதிமன்றங்களுக்கோ அல்லது இராணுவ நீதிமன்றங்களுக்கோ அழைத்துச் செல்ல முடியாது உள்ளது என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் புத்த சாசனத்தை அழித்து தேரர்களை கைது செய்து சர்வதேச நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சிலர் பொய் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர் .கடந்த 2015 ஆம் ஆண்டு தான் தேர்தலில் தான் தோல்வியடைந்தால் தன்னை மின்சார கதிரைகளுக்கு அழைத்துச் செல்வர் என மகிந்த ராஜபக்ஸ பொய் பிரச்சாரம் செய்ததாகவும் செய்திருந்தார்.

எனினும் அவர்கள் தெரிவித்தது போன்று எதுவும் நடைபெறவில்லை எனவும் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
அதற்காக மகிந்த ராஜபக்ஸ தினமும் காலை எழுந்ததும் அவரது உயிரை காப்பாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருக்கும் திசையை நோக்கி வணங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More