Home இலங்கை “பிரபாகரன்” திரைப்பட இயக்குநர் புலனாய்வுப் பிரிவினரின் கைப்பாவையா?

“பிரபாகரன்” திரைப்பட இயக்குநர் புலனாய்வுப் பிரிவினரின் கைப்பாவையா?

by admin

தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….

துசாராபீரிஸ் மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் மிகநெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் என  கடந்த செப்டெம்பர் 28 அன்று நாமல்பெரேரா வெளிப்படுத்திய தகவல்களில்  குறிப்பிடப்பட்டுள்ளன எனப் காவற்துறைத் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“பிரபாகரன்” என்ற திரைப்படத்தை 2008 இல் இயக்கிய பீரிஸ் இராணுவத்தினருடன் மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் நெருங்கிய உறவுகளைப் பேணினார். இந்த உண்மையை அவரே பலதடவைகள் ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.

இந்தத் திரைப்படம் ஜனாதிபதி அலுவலகம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவம் தரப்புகளின் உயர் அதிகாரிகளால் கொழும்பிலுள்ள தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் வைத்துப் பார்வையிடப்பட்டது.  இத்திரைப்படத்திற்கு தணிக்கைத்துறையின் அனுமதி கிடைத்தபின்னர் 2008 இன் முற்பகுதியில்  “டெய்லிமிரர்” இதனை செய்தியாக வெளியிட்டது. அதன்பின்னர், அந்தச் செய்தி அறிக்கை ஏனையோரால் இணையங்களில் மறுபிரசுரமாக்கப்பட்டது.

இந்தத்திரைப்படத்தைத் தமிழில் தயாரிப்பதற்காக துசாராபீரிஸ் சென்னையிலுள்ள ஜெமினி கலர் ஆய்வுகூடத்திற்குச் சென்ற போது அந்தத்திரைப்படம் அழிக்கப்படவேண்டும் எனக்கோரி குழு ஒன்றினால் தாக்குதலுக்குள்ளானார். அவரிடமிருந்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தின் பிரதிகளைத் திருப்பப் பெற்றுத்தருவதற்காக இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் தலையிட வேண்டுமெனக் கூறி பீரிஸ் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்ததாக “ஏசியன்ரிபியூன்” பின்னர் செய்தி வெளியிட்டது.

“பிரபாகரன்” திரைப்படத்தின் பிரதிகளைப் பெறுவதற்கு உதவ வலியுறுத்தி அப்போதைய இந்திய உயர்ஸ்தானிகராகவிருந்த அலொட்பிரசாத்திற்கு பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய இயக்கம் கடிதம்எழுதியுள்ளது என “தஐலண்ட்” நாளிதழ் செய்திவெளியிட்டது.

அவர் ஏன் நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றார்?

இப்படியாக இராணுவத்துடன் மிகநெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த திரு.பீரிஸ் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மேற்கோளிட்டு பிரான்சில் அரசியல்தஞ்சம் கோரியிருப்பது ஏன் எனச் சந்தேகமாகவுள்ளதென மூத்த பொலிஸ் உத்தியோகத்தர் “சிறிலங்காமிரர்” ஊடகத்திற்குக்கருத்துரைத்தார். பீரிஸ் தீவிரவாத அமைப்புகளுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருந்தார், அதேவேளை தமிழ் புலம்பெயர்ந்தோருடன் தொடர்பைக் கொண்டிருப்பதாகவும் சித்தரித்துள்ளார் என அந்தப் பொலிஸ் அதிகாரிமேலும் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவுகளின் முன்னாள் அதிகாரிகள் இதற்கு பின்னால் இருந்தார்களா என்பது சந்தேகமாக உள்ளது எனக் குறிப்பிட்ட அந்தப் பொலிஸ் அதிகாரி மேலதிகவிசாரணைகள் மேலும் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More