Home இலங்கை வல்வெட்டித்துறையில் 12 போராளிகளின் நினைவு தூபி அமைப்பதற்கு எதிர்ப்பு

வல்வெட்டித்துறையில் 12 போராளிகளின் நினைவு தூபி அமைப்பதற்கு எதிர்ப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் விடுதலைப்புலி உறுப்பினர்களான குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகள் நினைவாக ஏற்கனவே இருந்து அழிக்கப்பட்ட நினைவு தூபியை புனரமைப்பதுடன்,ஏனைய சகல போராளிகளுக்கும் சேர்த்து பிறிதொரு தூபியை அருகில் அமைப்பது என வல்வெட்டித்துறை நகரசபையில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டிருந்தது

இதற்கு அமைவாக இன்று இந்த தூபிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற இருந்தது

இதன்போது அங்கு வந்த ஒரு தொகுதியினர் இந்த தூபியை அமைக்கும் நடவடிக்கைக்கு எதிராக கோசம் எழுப்பினர். விடுதலைப்பலிகளை தவிர வேறு எந்த இயக்கத்தையும் நினைவு கூரும் தூபிகளை இங்கு அமைக்க வேண்டாம் என இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பினார்கள்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More