Home இலங்கை வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு சாவகச்சேரியில் வியாபாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது…  

வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு சாவகச்சேரியில் வியாபாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது…  

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


தீபாவளி வியாபாரத்திற்கு வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு சாவகச்சேரி நகர் பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதிக்க கூடாது என சாவகச்சேரி வணிகர் மன்றம் விடுத்த கோரிக்கையை நகர சபை ஏற்றுக்கொண்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாபார நோக்குடன் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வியாபாரங்களை முன்னெடுப்பதனால் நிரந்தரமாக சாவகச்சேரி நகர் பகுதியில் வியாபாரம் மேற்கொள்ளும் உள்ளூர் வியாபாரிகள் நஷ்டங்களை எதிர்நோக்குவதனால் , வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி வழங்க கூடாது என நகர சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த விடயம் சாவகச்சேரி நகர சபை கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டதை அடுத்து நகர் பகுதியில் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி வழங்குவதில்லை எனவும் , அவ்வாறு வழங்குவதாயின் நகரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பாலே வியாபார நடவடிக்கையை முன்னெடுக்க அனுமதி வழங்குவதாகவும் சபையில் ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More