Home இலங்கை நாமல் குமார மீண்டும் CIDயில் முன்னிலையாகவுள்ளார்.

நாமல் குமார மீண்டும் CIDயில் முன்னிலையாகவுள்ளார்.

by admin


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்ய சதி செய்யும் விதமாக தொலைபேசியில் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தல் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் காவற்துறைமா மா அதிபர் நாலக சில்வாவுக்கும், காவற்துறை உளவாளி நாமல் குமாரவுக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் ஒலிப்பதிவுகள் தொடர்பிலான குரல் சோதனை மாதிரிகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு பெறப்பட்ட குரல் மாதிரிகள் அவ்விருவரின் குரல் மாதிரிகளுடன் ஒத்துப் போவதாக அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோரது கொலை விவகாரத்துடன் தொடர்புடைய மேலும் சில குரல் பதிவுகளை கையளிப்பதற்காகவே அவர் இன்று குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More