Home உலகம் உகண்டாவில் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் பலி

உகண்டாவில் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் பலி

by admin
 

உகண்டாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  உகண்டாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புடுடா மாவட்டத்திலேயே இவ்வாறு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும், வெள்ளப் பெருக்கால் அங்குள்ள மூன்றுக்கு மேம்பட்ட கிராமங்கள் முழுவதும் மூழ்கியுள்ளதுடன் வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றதெனவும் மேலும் பலர் புதைந்துள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் எனவும் தெரிவிக்கபடப்டுள்ளது. மேலும் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More