Home இலங்கை தாஜூடீன் பயணித்த வாகனத்தை பின்தொடர்ந்த வாகனம் அரச இரசாயன பகுப்பாய்வுக்குட்படுத்த உத்தரவு

தாஜூடீன் பயணித்த வாகனத்தை பின்தொடர்ந்த வாகனம் அரச இரசாயன பகுப்பாய்வுக்குட்படுத்த உத்தரவு

by admin


பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் படுகொலையின் போது அவர் பயணித்த வாகனத்தை பின் தொடர்ந்ததாக புலனாய்வுத்துறையினரால் சாட்சிப் பொருளாக முன்வைக்கப்பட்டுள்ள டிபெண்டர் வாகனத்தினை அரச இரசாயன பகுப்பாய்வுக்குட்படுத்த கொழும்பு மேலதிக நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மனைவி சிராந்தி ராஜபக்ஸவின் சிரிலிய சவிய வேலைத்திட்டத்திற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த குறித்த டிபெண்டர் வாகனத்தினுள் உயிரியல் , வெடிபொருள் துகள்கள் அல்லது ஆடைகளின் துண்டுகள் ஏதேனும்; உள்ளதா என்பதை கண்டறிய புலனாய்வுத்துறையினர் விடுத்த கோரிக்கையினை ஏற்றுக் கொண்டுள்ள நீதிமன்றம் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

மேலும் தற்போது புலனாய்வுத்துறையினரின் பொறுப்பிலுள்ள குறித்த டிபெண்டர் வாகனத்தினை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி இந்த அறிக்கையை பெறுவதற்கான அனுமதியும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More