Home இலங்கை இலுப்பைக்கடவையில் 38 இலட்சம் ரூபாய் பெறுமதியானகேரள கஞ்சாப் பொதியுடன் ஒருவர் கைது

இலுப்பைக்கடவையில் 38 இலட்சம் ரூபாய் பெறுமதியானகேரள கஞ்சாப் பொதியுடன் ஒருவர் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


இலுப்பைக்கடவை காவல்துறைப் பிரிவுக்குற்பட்ட தேத்தாவாடி பகுதியில் 38 கிலோ 210 கிராம் கேரள கஞ்சாப்பொதியுடன் மன்னார் பேசாலையைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரை நேற்று புதன் கிழமை (2) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பொதி செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையிலே குறித்த கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டுதோடு குறித்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கஞ்சா போதைப்பொருள் 38 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிசின்; பணிப்புரைக்கு அமைவாக மன்னார் மாவட்ட காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று புதன்கிழமை இரவு குறித்த பகுதிக்குச் சென்று குறித்த போதைப்பொருட்களை மீட்டுள்ளதோடு,குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சாப்பொதிகள் இலுப்பைக்கடவை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை இலுப்பைக்கடவை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More