Home இலங்கை நானாட்­டான் பிர­தே­சத்­துக்கு 800 வீடு­கள் தேவை.

நானாட்­டான் பிர­தே­சத்­துக்கு 800 வீடு­கள் தேவை.

by admin

மன்­னார், நானாட்­டான் பிர­தே­சச் செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்கு இது வரை­யில் 400 வீடு­கள் வழங்­கப்­பட்­ட­போதும், புதி­தாக திரு­ம­ணம் முடித்­த­வர்­கள், நீண்­ட­கா­லம் இடம்­பெ­யர்ந்­த­வர்­கள், முன்­னாள் போரா­ளி­கள், பெண்­ த­லை­மைத்­துவக் குடும்­பங்­கள் என்று நானாட்­டான் பிர­தேச மக்­க­ளின் வீடில்லாக் குறை­களைத் தீர்ப்­ப­தற்கு இன்­னும் 800 வீடு­கள் தேவைப்­ப­டும் எனப் பிர­தே­சத்­தில் திரட்­டிய தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

நானாட்­டான் பிர­தே­சத்­தில் சென்ற வரு­டம் அதி­க­மாக வீட்­டுத்­திட்­டங்­கள் தொடா்­பா­கவே மக்­கள் பிர­தி­நி­தி­க­ளி­ட­ மும், அரச அதி­கா­ரி­க­ளி­ட­மும் மக்­கள் முறைப்­பா­டு­கள் செய்­தி­ருந்­த­தாக தக­வல் கிடைத்­ததை அடுத்து, சில கிரா­மத்து மக்­களை நேர­டி­யாக சந்­தித்து கருத்­துக்­கள் கேட்­கப்­பட்­டது.

குறிப்­பாக அச்­சங்­கு­ளம், நறு­வி­லிக்­கு­ளம், கற்­க­டந்­த­கு­ளம், மடுக்­கரை, எரு­விட்­டான் போன்ற கிரா­மங்­கள் உள்­ள­டங்­க­லான மக்­கள் தெரி­வித்­த­தா­வது -போh்க்காலத்­தி­லும் போh் முடிந்த பின்­ன­ரும் பல்­வேறு நிறு­வ­னங்­க­ளி­னால் வீட்­டுத்­திட்­டங்­கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. இவை ஒரே அள­வான பெறு­ம­தி­யா­னவை அல்ல. அத்­து­டன் முறை­யான தொழி­நுட்ப ஆலோ­ச­னை­க­ளு­டன் கட்­டப்­பட்­ட­வை­யும் அல்ல. அதன்­பின் அர­சின் அனு­ச­ர­ணை­யு­டன் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சி­னால் மூன்று இலட்­சம், ஐந்து இலட்­சம், ஏழரை இலட் சம் என்று பல்­வேறு நிதி­பெ­று­ம­தி­க­ளில் வீடு­கள் வழங்­கப்­பட்­டன.

இவ்­வா­றான செயற்­பா­டு­கள் மூலம் அரசு தமக்கு பார­பட்­சம் காட்­டு­வ­தாக மக்­கள் சிலா் குற்­றம் சுமத்­து­கின்­ற­னர். ஏற்­க­னவே சில நிறு­வ­னங்­க­ளின் மூலம் வழங்­கப்­பட்ட வீடு­கள் தரம் இல்­லா­மல் மிக மோச­மாக இருப்­ப­தா­க­வும் மக்­கள் கருத்து தெரி­விக்­கின்­ற­னர்.

அத்­து­டன் அர­சி­னால் வீடு­வ­ழங்­கு­வ­தற்கு மேற்­கொள்­ளப்­ப­டும் புள்ளி இடல் செயற்­பாட்­டில், மக்­கள் அதி­ருப்தி கொண்­டுள்­ள­னர். ஏனெ­னில் எல்­லா­வி­த­மான சமூக பௌ­தீக தக­வல்­கள் அதில் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. மேம்­போக்­கான செயற்­பா­டு­க­ளால் உண்­மை­யான வீட்­டுத் தேவை உடை­யோ­ருக்கு வீடு­கள் வழங்­கப்­ப­டா­மல், பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இது தொடர்­பான விட­யங்­க­ளில் அதி­கா­ரி­கள் உரி­ய­க­வ­னம் எடுக்க வேண்­டும் என­வும் மக்­கள் கேட்­டுக்­கொள்­கின்­ற­னர்.

அரசு வீட்­டுத்­தொ­கு­தி­களை அமைத்­துக் கொடுத்து, அர­சி­யல் இலா­பம் கரு­தப்­பார்க்­கி­றது.

வீட்­டுத் தேவை உடை­ய­வர்­க­ளுக்கு அவர்­க­ளின் சொந்தக் காணி­க­ளில் வீடு­கள் வழங்க வேண்­டும் என­வும், பெரு­வா­ரி­யான மக்­கள் கேட்டு நிற்­கின்­ற­னா்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More