Home இலங்கை வாக்கு மூலம் பெறுவதற்கு, பூஜித ஜயசுந்தரவுக்கு அழைப்பு…

வாக்கு மூலம் பெறுவதற்கு, பூஜித ஜயசுந்தரவுக்கு அழைப்பு…

by admin

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ ஆகியோரின் கொலை சதி விவகாரம் தொடர்பில் வாக்கு மூலமொன்றை பெற்றுகொள்வதற்காக காவல்துறைமா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார வெளிப்படுத்தியுள்ள தகவல் தொடர்பில் விசாரணையை மேற்கொள்வதற்காகவே காவல்துறைமா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More