Home இலங்கை தாயகம் திரும்ப முற்பட்ட சகோதரர்கள் இந்திய கடலோர காவற்படையினரால் கைது :

தாயகம் திரும்ப முற்பட்ட சகோதரர்கள் இந்திய கடலோர காவற்படையினரால் கைது :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழகத்தில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு தப்ப முயற்சித்த இரண்டு பேரை இந்திய கடலோக காவற்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை(15) மாலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இந்திய கடலோக காவற்படையினர் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்கள் இராமேஸ்வரம் மண்டபத்தில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு படகில் சென்று கொண்டிருந்த போது மன்னார் வளைகுடா கடற்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய கடலோக காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சகோதரர்களான சிவராஜா மற்றும் அன்பு குமரன் என தெரிய வந்துள்ளது. இருவரும் இலங்கையில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக கடந்த 1990 ஆம் ஆண்டு படகு மூலம் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்றதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இவர்கள் மதுரை ஆனையூர் முகாமில் தங்கியுள்ளதாக தெரிய வருகின்ற நிலையில் மேலதிக விசாரணைகளை இந்திய கடலோக காவற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More