Home இந்தியா சபரிமலையில் தரிசனம் செய்வதற்காக சென்ற இரண்டு பெண்கள் தடுத்து நிறுத்தம்

சபரிமலையில் தரிசனம் செய்வதற்காக சென்ற இரண்டு பெண்கள் தடுத்து நிறுத்தம்

by admin


சபரிமலையில் தரிசனம் செய்வதற்காக புறப்பட்டுச் சென்ற இரண்டு பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால், அவர்கள் பம்பை திரும்பிச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்து
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக ஐயப்ப பக்தர்களும் இந்து அமைப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்ற போதும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.

இவ்வாறு பாதுகாப்புடன் செல்லும் பெண்களுக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர். இதனால் பல பெண்கள் தங்கள் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு திரும்ப நேர்ந்தது.

இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த இரு பெண்கள் இன்று காலை பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்டனர்.  இதுபற்றி தகவல் அறிந்த பக்தர்கள் அந்த பெண்களை முன்னேற விடாமல் அவர்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தியதனால் 2 பெண்களும் காவல்துறையினரினரின் பாதுகாப்புடன் பம்பை திரும்பியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More