Home இலங்கை தமிழ் மொழி தெரிந்த ஒருவரே ஜனாதிபதியாக வர வேண்டும்

தமிழ் மொழி தெரிந்த ஒருவரே ஜனாதிபதியாக வர வேண்டும்

by admin


சிறுபான்மை இனத்தவர்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பேசும் தமிழ் மொழி தொடர்பில் தௌிவு பெற்ற ஒருவரே ஜனாதிபதியாக வர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது நாட்டில் காணப்படுகின்ற சூழ்நிலையில் ஜனாதிபதித் தேர்தலே நடைபெற வேண்டும் எனவும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More