Home இலங்கை கர்ப்பிணிப் பெண் மீது, மண்வெட்டி பிடியினால் தாக்குதல்…

கர்ப்பிணிப் பெண் மீது, மண்வெட்டி பிடியினால் தாக்குதல்…

by admin

நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் மண்வெட்டி பிடியினால் தாக்குதல் நடத்தப்பட்டதில், தாக்குதலுக்கு இலக்கான பெண் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். யாழ்.சாவகச்சேரி கெற்போலி பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை குறித்த தாக்குதல் நடைபெற்று உள்ளது.

அது குறித்து தெரியவருவதாவது, தாக்குதலுக்கு இலக்கான பெண்ணும், தாக்குதல் நடத்தியவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், குறித்த பெண் கர்ப்பம் அடைந்த நிலையில் அந்த பெண்ணை கைவிட்டு அந்நபர் சென்றுள்ளார்.

அதனால் பாதிக்கப்பட்ட பெண் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

அந்நிலையில் நேற்று மாலை குறித்த பெண் வீதியால் சென்று கொண்டிருந்த போது, வீதியில் வழிமறித்த முன்னாள் காதலன் மண் வெட்டி பிடியினால் அவரது வயிற்றில் பலமாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான பெண் வீதியில் சுருண்டு விழுந்து கதறியதை அடுத்து வீதியால் சென்றவர்கள் அப்பெண்ணை மீட்டு நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) மூலம் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொடிகாம காவல் நிலையத்தில் தாக்குதலுக்கு இலக்கான பெண் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் காவற்துறையினர் தாக்குதலாளியை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More