Home இலங்கை மன்னார் காட்டுப்பகுதியிலிருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு

மன்னார் காட்டுப்பகுதியிலிருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் பேசாலை நடுக்குடா கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதி ஒன்றிலிருந்து பெருமளவு வெடி பொருட்களை நேற்று மாலை மீட்டுள்ளதாக மன்னார் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவருகையில்,

நேற்று வியாழக்கிழமை மதியம் மன்னார் பேசாலை நடுக்குடா கடற்கரையோரத்திலுள்ள காட்டுப்பகுதியில் பரல் ஒன்றில் மர்மப் பொருட்கள் காணப்படுவதாக பொது மகன் ஒருவரினால் பேசாலை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் அப்பகுதியிலிருந்து பரல் ஒன்றிலிருந்து கிளைமோர் 1, ஜெரற்னைட் 04, துப்பாக்கி, துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் என்பன மீட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை .

இது குறித்த விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More