Home இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வை வென்றெடுப்பதற்காக எதிர்கால நடவடிக்கைகள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வை வென்றெடுப்பதற்காக எதிர்கால நடவடிக்கைகள்

by admin

 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், (இ.தொ.கா) இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் (இ.தே.தோ.தொ.ச) பெருந்தோட்டதொழிற்சங்க நிலையம் (பெ.தொ.நி) ஆகிய தொழிற்சங்கங்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளம் ரூ.700/= இற்கு இணக்கம் தெரிவித்து இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் பெருந்தோட்ட சம்பள உயர்விற்கான புதிய கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடக்கூடாது. இவ்வுடன்பாடு எவ்வகையிலும் நியாயமானதில்லை என்பதால் பொதுவாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் இ.தொ.கா, இ.தே.தோ.தொ.ச, பெ.தொ.நி என்பவறில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களுக்கு உடன்பாடில்லாத நிலையிலும் இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தொழிற்சங்கங்கள் முனையுமாயின் அவற்றை கைச்சார்த்திட விடாது தடுத்து நிறுத்த வேண்டும். நியாயமற்ற இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாது, அவற்றை தடுத்து நிறுத்த எல்லாவிதமான அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளிலும் போராட்டங்களிலும் அனைத்து தொழிலாளர்களும் ஈடுபடவேண்டும் என்று மக்கள் தொழிலாளர் சங்கம் அறைகூவல் விடுக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள், தோட்ட கம்பெனிகள் இலங்கை முதலாளிமார் சம்மேளனம்  என்பவற்றுடன் தொழில் அமைச்சரும், பெருந்தோட்ட கைதொழில் அமைச்சரும் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை ரூ.700/= வாக ஆக்கி மொத்த சம்பளம் ரூபா.750/= ஆக ஆக்கி உடன்பாடு காணப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தம் (காலை) 28-01-2019 அன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இதற்கு தொழிலாளர்கள் கடுமையான எதிர்ப்பை காட்டியுள்ளதால் இரகசியமான இடத்தில்  கைச்சாத்திடப்படவுள்ளதாக அறியமுடிகிறது. இது தொழிலாளர்களுக்கு இழைக்கும் பாரிய அநிதியும் துரோகமும் ஆகும் எனவே இவ்வொப்பந்தம் கைச்சார்திடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மக்கள் தொழிலாளர் சங்கம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வை வென்றெடுப்பதற்காக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அறிவிக்கும் ஊடாக சந்திப்பில் அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா தெரிவித்தார்.

27-01-2019 அன்று கொழும்பிலுள்ள பிரைட்டன் ஹொட்டலில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டதாவது. கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் ரூபா.1000/= நாளாந்த அடிப்படைச் சம்பளமாக்க வேண்டுமென்று கோரிக்கையை கைவிட்டு 2016 ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தின் படி வழங்கப்பட்ட ரூபா.500/= அடிப்படை சம்பளத்தை ரூபா.700/= ஆக்கவும் அதனுடன் விலைக்கொடுப்பனவு ரூபா.50/= ஐ சேர்த்து ரூபா.750/= மொத்த நாள் சம்பளமாக்கவும் உடன்பட்டுள்ளது. இதனால் 2016 ஆம் ஆண்டு உடன்படிக்கையின்படி கிடைத்த மொத்த சம்பளமான ரூபா.730/=, ரூபா.750/= ஆக்கப்படலாம். இதனால் தொழிலாளர்களுக்கான மொத்த நாள் சம்பளம் ரூபா.20/= மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இதுபற்றி குறிப்பிட்ட தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு கூட உடன்பாட்டில்லை. எனவே இந்த அநீதியான உடன்பாட்டை அனைவரும் எதிர்க்க வேண்டும்.

எதிர்ப்பையும் மீறி சம்பந்தப்பட்டவர்கள் கைச்சாத்திட முனைந்தால் அதனை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மீண்டுமொரு ஒப்பந்தம் செய்யப்படும்வரை அதனை எவரும் கேள்விக்குட்படுத்தவும் முடியாது. சம்பந்தப்பட்ட தரப்புகளாலன்றி வேறு எவராலும் அதனை இரத்து செய்யவும் முடியாது. இந்த அநீதியான உடன்பாட்டிற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையை கூட எவரும் எடுக்க முடியாது.

அத்துடன் பேரப்பேச்சில் ஈடுபட்ட அரசாங்க அமைச்சர்கள் பெருந்தோட்டக் கம்பெனிகளின் நலனிலேயே அக்கறை செலுத்தியுள்ளனர். அடிப்படை சம்பளத்தில் ரூபா.200/= உயர்த்தப்பட்டதால் நிலுவையாக இருக்கும் சம்பளத்தை வழங்க பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் அரசாங்க நிறுவனமான இலங்கை தேயிலை சபையிலிருந்து 100 மில்லியன் ரூபாவை வழங்க உடன்பாடு காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளகர்கள் உழைத்து கொடுத்த்தோ கம்பனிகளுக்கு. ஆனால் சம்பள உயர்வு நிலுவை சம்பளத்தையும் வழங்கப்போவதால் ஏற்கனவே வரிச்சலுகைகளுடன் மானியங்களையும் தோட்டக் கம்பெனிகளுக்கு வழங்கி வரும் அரசாங்கம் சம்பள உயர்வு நிலுவை சம்பளத்தையும் வழங்க உடன்படும் அளவிற்கு அரசாங்கம் கம்பெனிகளை வெகுவாக பாதுகாக்கிறது. இது நாட்டின் பொது நிதிக் கொள்கைக்கு உடன்பாடானாதாக இருக்க முடியாது. எங்கே யாரிடம் அனுமதிபெற்று அரசாங்கம் அப்பணத்தை கம்பெனிகளுக்கு வழக்க முன்வந்தது என்பது கேள்வியாகிறது. அத்துடன் ஏனைய தனியார் கம்பெனிகளுக்கும் இவ்வாறு தேவை ஏற்படும் போது உதவும் நிலை ஏற்படும். இது பொதுமக்களுக்கு அநீதி இழைக்கும் தனிப்பட்ட கம்பெனிகளை பாதுகாக்கும் நடவடிக்கை.

இதிலிருந்து கம்பெனிகளை பாதுகாக்கவே அரசாங்கம் எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதுடன் தொழிலாளர்களின் ரூபா.1000/= கோரிக்கையை நிராகரித்து உதாசீனம் செய்துள்ளது இதன் மூலம் அரசாங்கமும் தோட்டத் தொழிலாகர்களுக்கு பாரிய துரோகத்தை இழைத்துள்ளது. தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளம் கொடுக்கப்படுவது அவசியம். அதற்கு பொறுப்பு கம்பெனிகளே அவை அக்கடமையிலுருந்து தப்ப முடியாது. ஆனால் அரசாங்கம் கம்பெனிகளின் சார்பில் நிலுவை சம்பளத்தை வழங்குவதென்பது வரன்முறைகளையும் சட்டங்களையும் மீறி கம்பெனிகளை பாதுகாப்பதாகும் இதில் அரசாங்கத்திற்கு ஏற்படவுள்ள நட்டம் கணக்கில் எடுக்கப்படாமல் கம்பெனிகளை பாதுகாக்க அரசாங்கம் முன்வந்துள்ளது. ஆனால் தொழிலாளர்களை புறக்கணித்துள்ளது. தொழிலாளர்களின் உழைப்பில்லாமல் பெருந்தோட்டங்களில் எதுவும் அசையாது. எனினும் அரசாங்கம் தோட்ட கம்பெனிகளையே பாதுகாக்க முன்வந்துள்ளது.

எட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படும் சம்பள உயர்வு உடன்பாடு அரசாங்கம் தோட்டக் கம்பெனிகள், இலங்கை முதலாளிமார் சம்மேளனம், கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் என்பன கூட்டாக இணைந்து தொழிலாளர்களுக்கு எதிராக செய்யும் சதியாகும்.

எனவே இந்த சதியை முறியடித்து நியாயமான சம்பளத்தை வென்றெடுக்க வேண்டுமாயின் தற்போது இணக்கம் காணப்பட்டுள்ளதாக கூறப்படும் ஒப்பந்தத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்க வேண்டும்.

           மக்கள் தொழிலாகர் சங்கம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More