Home இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்தில் விரைவு அபிவிருத்தி திட்டம்

காங்கேசன்துறை துறைமுகத்தில் விரைவு அபிவிருத்தி திட்டம்

by admin


காங்கேசன்துறை துறைமுகப் பணிகள் 2021ஆம் ஆண்டு நிறைவடையும் போது, அங்கு சரக்குப் போக்குவரத்து கப்பல்கள் வந்து செல்லுமளவுக்கு விரைவு அபிவிருத்தி திட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த துறைமுகத்துக்கு சரக்குக் கப்பல்கள் வந்துச் செல்வதால் நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிப்பதற்கான சந்தாப்பம் கிடைப்பதுடன், வடபகுதி மக்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளும் கிடைக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கடனுதவியின் 45.27 மில்லியன் டொலர்கள் நிதியுதவியின் கீழ் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இத்திட்டத்தை விரைவுப்படுத்துவதற்காக,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் , அரசின் உயர் அதிகாரிகள் இணைந்து அடுத்த மாதம் 15ஆம் திகதி காங்கேசன்துறைமுகப் பகுதிக்கு செல்லவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More