Home இலங்கை இலங்கையின் சுதந்திர தின துவிச்சக்கர பவனி மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி :

இலங்கையின் சுதந்திர தின துவிச்சக்கர பவனி மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கம்பகா மாவட்டத்தைச் சேர்ந்த ரி.எச்.கெபட் பீரிஸ் (வயது-53) என்ற வீரர் ஆரம்பித்த சுதந்திர தின துவிச்சக்கர பவனி நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னாரை வந்தடைந்த நிலையில் இன்று புதன் கிழமை காலை மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது

ரி.எச்.கெபட் பீரிஸ் என்ற வீரர் இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 24 ஆம் திகதி ஹம்பகாவில் வைத்து தனது குழுவினருடன் சுதந்திர தின துவிச்சக்கர பவனியை ஆரம்பித்தார்.

குறித்த பவனி பல்வேறு இடங்களுக்குச் சென்று நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னாரை வந்தடைந்தது. இந்த நிலையில் குறித்த வீரர் உள்ளிட்ட குழுவினர் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று புதன் கிழமை காலை பயணத்தை தொடர்ந்தனர்.

இந்த பவனிக்கு ; மத்திய விளையாட்டுத்திணைக்களத்தின் மாவட்ட விளையாட்டு பிரிவு மற்றும் உறுளை பந்தாட்ட சம்மேளனம் ஆகியவை ஆதரவு வழங்கியது.

இன்று காலை 7 மணியளவில் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கு முன்பாக பவனி ஆரம்பிக்கப்பட்ட போது பாடசாலை மாணவர்கள், மத்திய விளையாட்டுத் திணைக்களத்தின் மாவட்ட விளையாட்டு பிரிவு அதிகாரிகள், மற்றும் உறுளை பந்தாட்ட சம்மேளனம் ஆகியவை முழு ஆதரவை வழங்கியதோடு,பாடசாலை அதிபர் குறித்த பவனியை ஆரம்பித்து வைத்தார். குறித்த பவனி மன்னார் பிரதான பாலம் கூடாக யாழ்ப்பாணத்தை நோக்கி சென்றமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More