Home இந்தியா போராட்டத்தில் ஈடுபட்ட 3 ஆயிரம் ஆசிரியர்கள் பணி இடமாற்றம் :

போராட்டத்தில் ஈடுபட்ட 3 ஆயிரம் ஆசிரியர்கள் பணி இடமாற்றம் :

by admin

ஜாக்டோ – ஜியோ அமைப்பின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் மேற்கொண்டிருந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 1500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 29ம் திகதி இரவு வழங்கப்பட்ட காலக்கெடுவுக்கு பின்னர் பணியில் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் ஆசிரியர்கள் பணி இடம் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மாணவர்களின் நலன் கருதியும், அரசின் கோரிக்கையை ஏற்றும் தாங்கள் பணிக்கு திரும்பிய போதும் ; பழிவாங்கும் நோக்கத்துடன் ஆசிரியர்கள் மீது தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தவிர்த்து தங்களுக்கு வேண்டாதவர்கள் மீது முதன்மை கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் எனவும் இடமாறுதல் வழங்கப்பட்ட பின்னரும் சிலர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களில் 59 சதவீதம் பேர் ஆசிரியர்கள், மிகுந்த மனஉளைச்சலில் உள்ளனர் எனவும் ஆசிரியர்கள் மீதான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More