Home இலங்கை அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையீனமே, வாக்களிப்பு வீதம் குறைவதற்கு காரணம்…

அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையீனமே, வாக்களிப்பு வீதம் குறைவதற்கு காரணம்…

by admin

அரசியல்வாதிகள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையீனமே தேர்தல்களில் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவதற்கான முக்கிய காரணம் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்றையதினம் நடைபெற் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது தேர்தல்களின் வாக்களிப்பு வீதம் குறைவதற்கான காரணம் தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தலில் அரசியல்வாதிகளை தெரிவு செய்த பின்னர், அந்த அரசியல்வாதிகள்தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் எனவும் தாங்கள் எதுவும் பேசக்கூடாது என மக்கள் நினைக்கின்றார்கள்

மக்கள் தெரிவு செய்யும் அரசியல்வாதிகள் மக்களின் ஆணைப்படி நடந்து கொள்ளாவிட்டால் அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்கும் நிலை மக்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அரசியல்வாதிகளிடம் மக்கள் கேள்வி கேட்கும் நிலை வந்தால்தான் மக்களிடத்தில் தேர்தல் தொடர்பாக மக்களுக்கு நம்பிக்கை உருவாகும்.

மக்கள் அனைவரும் ஜனநாயகத்தின் பெறுமதியை தெரிந்து வைத்திருந்தால் எதிர்காலத்தில் வாக்களிப்பு வீதம் குறைவடையாது என எதிர்பார்க்கின்றோம் எனவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More