Home இலங்கை இலங்கைக்கான கடன் திட்டத்தின் காலத்தை நீடிக்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்

இலங்கைக்கான கடன் திட்டத்தின் காலத்தை நீடிக்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்

by admin

இலங்கைக்கான கடன் திட்டத்தின் காலத்தை நீடிக்கவும் 6 ஆம் கட்ட கொடுப்பனவை வழங்கவும் சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது.  இதனையடுத்து 1.5 பில்லியன் ரூபா கடன் திட்டத்தின் கால வரையறையானது மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க இணக்கம் தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் 6 ஆம் கட்ட கடன் கொடுப்பனவை வழங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் 1.5 பில்லியன் டொலர் கடனை மேலும் ஓரு வருடத்துக்கு நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே இவ்வாறு கடன் திட்டத்தின் கால அளவை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More