Home இலங்கை கிளிநொச்சியில் ஒருவர் வெட்டிக்கொலை

கிளிநொச்சியில் ஒருவர் வெட்டிக்கொலை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் ஓருவர் இன்று(05-03-2019) காலை ஏழு நாற்பதைந்து மணியளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் கிளிநொச்சி கிளை முகாமையாளரான 32 வயதான காந்தலிங்கம் பிறேமரமணன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வவுனியா வேப்பங்குளத்தை சேர்ந்த இவர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை தனது அலுவலகப் பணிப்பாளருடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு உதயநகர் கிழக்கில் தங்கியிருக்கும் இடத்திலிருந்து புறப்படும்போதே உந்துருளியில் வந்த ஒருவர் சரமாறியாக வெட்டியுள்ளார். தலை, கை, கால் மற்றும் உடம்பில் வெட்டுக்காயங்களுக்குள்ளான அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன் உயிரிழந்துள்ளார்.

உறவினர் ஒருவரே வெட்டியதாகவும் வெட்டிய நபர் கிளிநொச்சி காவல்நிலையத்தில் நிலையத்தில் சரணடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர்; மேற்கொண்டு வருகின்றனர்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More