Home இலங்கை திருட்டு வழியால் மகிந்த ஆட்சியை கைப்பற்றியதால்தான் நாடு பாதிக்கப்பட்டது :

திருட்டு வழியால் மகிந்த ஆட்சியை கைப்பற்றியதால்தான் நாடு பாதிக்கப்பட்டது :

by admin

நாட்டின் கடன்சுமையை அடைக்க வழியில்லாமல் தப்பிச்சென்ற மகிந்த ராஜபக்ச திருட்டு வழியால் வந்து ஆட்சியை பெற்றுக்கொண்டவர் என தெரிவித்துள்ள ராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும , மகிந்தவின் செயற்பாடுகள் காரணமாகவே அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடைப்பட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவுசெலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின் நான்காவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ராஜபக்ச அரசாங்கம் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாக தெரிவித்து மக்களுக்கு பிரயோசனமற்ற வேலைத்திட்டங்களையே மேற்கொண்டுள்ளதாகவும் அதனால் அதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை அடைப்பதற்கு வழிதெரியாமல் ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே தேர்தலுக்கு சென்று தப்பிச்சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் தற்போதைய அரசு ஆட்சியை பெற்றுக்கொண்டு கடன்களை அடைப்பதற்கான வழிகளை அமைத்து, அதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டதாகவும் மகிந்த ராஜபக்ச, திருட்டு வழியால் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்ததனால் அரசின் பயணம் தடைப்பட்டதாகவும் அதன் விளைவாகவே வரவு செலவு திட்டத்தையும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கவேண்டி ஏற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More