Home இலங்கை வடக்கில் 14 பாடசாலைகளை, தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த நடவடிக்கை…

வடக்கில் 14 பாடசாலைகளை, தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த நடவடிக்கை…

by admin


வடமாகாணத்தின் 14 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான கோரிக்கையினை மத்திய கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வடமாகாணத்தின் பல பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான அனுமதியினை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையினை அண்மைக்காலமாக ஆளுநரிடம் முன்வைத்து வருகின்ற நிலையிலேயே ஆளுநர் மேற்குறிப்பிட்ட தீர்மானத்தினை எடுத்துள்ளார்.

ஏனைய எட்டு மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடமாகாணத்தின் தேசிய பாடசாலைகள் 2 சதவீதமாக காணப்படும் அதேவேளை ஏனைய மாகாணங்களின் தேசிய பாடசாலைகள் 3.5 சதவீதமாக காணப்படுவதனால், வடமாகாணத்தின் தேசிய பாடசாலைகளையும் சராசரியாக 3.5 சதவீதமாக கொண்டுவரும் நோக்கில் 14 பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கு ஆளுநர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More