Home சினிமா வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி

வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி

by admin


மணிரத்னமின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் கதையில் நடிகர் கார்த்தி வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.  மணிரத்னம் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் ‘செக்கச்சிவந்த வானம்’. வணிக ரீதியாக மட்டுமின்றி, விமர்சன ரீதியாகவும் இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தன்னுடைய நீண்ட நாள் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ கதையைக் கையில் எடுத்துள்ளார் மணிரத்னம்.

இதற்கு முன்னர் ஒரு தடவை, விஜய், மகேஷ் பாபு என மிகப்பெரிய நடிகர்களை வைத்து இத் திரைப்படத்தைத் இயக்க முயற்சித்தார். ஆனாலும் படத்தின் செலவு குறித்த பிரச்சினையால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இப்போது விக்ரம், சிம்பு மற்றும் ஜெயம் ரவி ஆகியோரை வைத்து இத் திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், பல்வேறு படங்களில் நடித்து வருவதால் படக்குழுவினர் கேட்கும் தேதிகளை விஜய் சேதுபதியால் கொடுக்க முடியவில்லை. எனவே, அவருக்குப் பதிலாக கார்த்தி நடிக்கிறார். புகழ் பெற்ற கதாபாத்திரமான வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
 
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More