Home இலங்கை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு வலிமை உள்ளது…

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு வலிமை உள்ளது…

by admin

வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை விரைவில் அமைக்கவுள்ளதாக வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிகோரி தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே ஆளுனர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பணிகள் எவ்வளவு சீக்கிரம் நடக்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரமாக நடைபெற வேண்டும் எனத் தெரிவித்த அவர் பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தாக்கல் செய்யலாம். என்பதுடன் குற்றம் செய்தவர்களை நீதிக்கு முன்னால் கொண்டு வரலாம் எனவும் அந்த அளவுக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு வலிமை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் முடிவடைவதற்கு முன்னர் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை உருவாக்குவோம் எனவும் துரித கதியில் அந்தப் பணிகள் நடக்க வேண்டுமென்று அதன் தலைவரிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்த ஆளுனர் அலுவலகம் அமைப்பதற்கான இடம் தயாராக உள்ளதாகவும் அதனடிப்படையில் அந்தப் பணிகள் விரைவாக ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மட்டுமல்ல வேறு நாடுகளிலும் காணாமல் போனோர் பற்றி தொடர்ந்தும் தேடிக் கொண்டிருக்கின்ற நிலைமைகள் நிலவுகின்றன எனவும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை பொறுத்தவரையில் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர்களிடம் எந்த ரீதியான ஆறுதலைக் தேடுகின்றீர்கள் என்று கேட்க வேண்டும் எனவும் அதிலொன்று மனிதாபிமான ஆறுதல், மற்றொன்று நியாயம் கிடைக்க வேண்டும். இதில் எது வேண்டுமென்று அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு என்ன தீர்வை விரும்புகின்றார்களோ அந்தத் தீர்வுகளுக்கான அனுசரணையை வழங்க வேண்டுமே ஒழிய அவர்கள் என்ன செய்ய வேண்டுமென நாங்கள் சொல்ல கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 1977 ஆம் ஆண்டு முதல் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ள போதிலும் இறுதிக் கட்டத்தில் சரியாக காணமல் ஆக்கப்பட்டோர் எவ்வளவு பேர் என்பது இன்னமும் கண்டுபிடிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

சிலர் சில எண்ணிக்கையை கொடுக்கின்றனர் என்பதனால் நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்களுக்கும் தீர்வும் நீதியும் கிடைக்க வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கம் எனவும் அதனை தன்னுடைய பதவிக்காக செய்யாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செய்வது தான் மனிதாபிமானம் எனவும் அதுதான் சரியானது என என்ணுகின்ற மனநிலையில்தான் தான் இருக்கிறேன் எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More