Home இந்தியா பிஎஸ்எல்வி சி-45 விண்கலம் நாளை விண்ணில் பாயவுள்ளது

பிஎஸ்எல்வி சி-45 விண்கலம் நாளை விண்ணில் பாயவுள்ளது

by admin


ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து, நாளை காலை பிஎஸ்எல்வி சி-45 விண்கலம் விண்ணில் பாயவுள்ள நிலையில் அதற்கான கவுன்ட்டவுன் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது

கடந்த வாரம் மிஷன் சக்தியின் கீழ் ஏ-சாட் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டநிலையில், மூன்று வௌ;வேறு சுற்றுவட்டப்பாதைகளில் செயற்கைக்கோள்களைச் செலுத்தும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ள பிஎஸ்எல்வி சி-45 விண்கலம் நாளை காலை 9.30 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்படவுள்ளது.
இதன் மூலமாக, எமிசாட் என்னும் எலெக்ட்ரானிக் நுண்ணறிவுச் செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்படவுள்ளதுடன் ஸ்பெயின், லித்துவேனியா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் 28 செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்படவுள்ளன.

பொதுமக்கள் விண்வெளி தொடர்பான தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காக, பிஎஸ்எல்வி சி-45 விண்கலம் ஏவுவதைப் பார்வையிட அனுமதிக்கப்பட உள்ள நிலையில் இதற்காக சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 5,000 பேர் அமர்ந்து பார்வையிடும் அளவில் பார்வையாளர் பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்எல்வி சி-45 விண்கலம் மார்ச் 21ஆம் திகதி விண்ணில் ஏவப்படுவதாக இருந்த போதும் சில காரணங்களால் இந்த திகதி மாற்றப்பட்டது. இந்த விண்கலத்தின் நான்காவது நிலையில் சோலார் பேனல் முதல்முறையாக இணைக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More