Home இந்தியா விஜய் மல்லையாவின் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரும் மனு நிராகரிப்பு

விஜய் மல்லையாவின் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரும் மனு நிராகரிப்பு

by admin


தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் விவகாரத்தில் அவரது சார்பில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரும் மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை நிராகரித்துள்ளது. பணபரிவர்த்தனை மோசடி வழக்கில், இந்தியாவின் சட்ட நடவடிக்கையை தொடர்ந்து, விஜய் மல்லையாவை நாடு கடத்த, பிரித்தானிய உள்துறை அமைச்சு கடந்த பெப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

அதனை செயல்படுத்தும் ஆணையில் பிரித்தானிய உள்துறை அமைச்சு கையெழுத்திட்டதை எதிர்த்து விஜய் மல்லையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று விட்டு மீளச் செலுத்தாமை காரணமாக மதுபான தொழிற்சாலை அதிபர் விஜய் மல்லையாவின் இந்திய கடவுச்சீட்டு முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு அவர் நாட்டைவிட்டு வெளியேறி லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More