Home இலங்கை குடும்ப தகராறை விசாரிக்க சென்ற காவல்துறை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

குடும்ப தகராறை விசாரிக்க சென்ற காவல்துறை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

குடும்ப தகராறை விசாரிக்க சென்ற காவல்துறை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் காயமடைந்த காவல்துறை உத்தியோகஸ்தர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அச்சுவேலி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டது. அது தொடர்பில் மனைவி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொள்ள காவல்துறை உத்தியோகஸ்தர் முறைப்பாட்டாளரான பெண்ணின் வீட்டுக்கு சென்ற போது குறித்த பெண்ணின் கணவன் காவல்துறை உத்தியோகஸ்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

குறித்த தாக்குதலில் காவல்துறை உத்தியோகஸ்தர் காயமடைந்ததுடன் , அவரது சீருடையும் கிழிந்துள்ளதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மேலதிக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

அங்கு வந்த காவல்துறையினர் தாக்குதல் நடாத்தியவரை கைது செய்ததுடன் , தாக்குதலில் காயமடைந்த காவல்துறை உத்தியோகஸ்தரை மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More