Home இலங்கை மதுபோதையில் விபத்துக்குள்ளாகிய காவல்துறையினர் மருத்துவ மனையில் குழப்பம்

மதுபோதையில் விபத்துக்குள்ளாகிய காவல்துறையினர் மருத்துவ மனையில் குழப்பம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பலாலி காவல் நிலையத்தை சேர்ந்த இரு காவல்துறையினர் மதுபோதையில் விபத்துக்குள்ளாகியதுடன் மருத்துவ மருத்துவ மனையில் குழப்பத்தையும் உண்டு பண்ணி உள்ளனர்.

பலாலி காவல்நிலையத்தில் கடமையாற்றும் இரு காவல்துறையினர் மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற போது , சுன்னாகம் பகுதியில் வீதியில் பயணித்த ஆசிரியர் ஒருவருடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த விபத்தில் இரு காவல்துறை உத்தியோகஸ்தர்களும் காயமடைந்ததனை அடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் தெல்லிப்பளை வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் மதுபோதையில் அங்கு கடமையில் இருந்த தாதியர்களுடன் முரண்பட்டு உள்ளனர். அது தொடர்பில் வைத்திய சாலை நிர்வாகத்திற்கு தாதியர்கள் முறையிட்டனர்.

அது தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து வைத்திய சாலைக்கு வந்த காவல்துறையினர் காயமடைந்த இருவரையும் சமரசப்படுத்தி வைத்திய சிகிச்சை பெற வைத்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More