Home இலங்கை ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம்

ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம்

by admin


யாழ்ப்பாணத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை மோதிய வாகனம் தப்பிச் சென்றுவிட்டது என கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புலம்பெயர் சமுகத்துடன் இன்று முற்பகல் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்பதற்காக பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்கு பயணித்த வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. எனினும் ஊடகவியலாளரிடம் வாக்குமூலம் எடுக்கப்படாத்தால் விபத்தா தாக்குதலா? என்று கூற முடியவில்லை.

இந்தச் சம்பவம் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரிக்கு அண்மையில் இன்று முற்பகல் இடம்பெற்றது என்று காவல்துறையினாப்கூறினர்.

‘வடமராட்சியிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்கு மூத்த ஊடகவியலாளர் இ.தயாபரன் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை, பின் பக்கமாக வந்த வாகனம் அவரை மோதிவிட்டுத் தப்பித்தது என்று சம்பவ இடத்தில் நின்றவர்களால் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் தலையில் காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.எனினும் மேலதிக சிகிச்சைக்காக ஊடகவியலாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்’ என்றும் காவல்துறையினர்தெரிவித்தனர்.

ஊடகவியலாளர் இ.தயாபரன் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More