Home இந்தியா 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பம்

4 தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பம்

by admin


தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் கடந்த 18ம் திகதி நடைபெற்ற நிலையில் வேலூர் மக்களவை தொகுதி தவிர ஏனைய 38 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றிருந்த நிலையில் மே 19-ம் திகதி அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறும் என தேர்தல் ஆணையகம் அறிவித்திருந்தது.

இந்தநிலையில் அரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பமாகி 29-ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

மனுக்கள் மீதான பரிசீலனை 30-ம் திகதி நடைபெற்று தொகுதிகளுக்கும் வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு மே 19-ம் திகதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More