Home இலங்கை இலங்கையில் ஐ.எஸ். இன் முதல் தாக்குதல் வவுணதீவு காவல்துறை படுகொலை!

இலங்கையில் ஐ.எஸ். இன் முதல் தாக்குதல் வவுணதீவு காவல்துறை படுகொலை!

by admin

இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முதல் தாக்குதல் சம்பவமாக வவுணதீவு காவற்துறையினர் மீதான தாக்குதல் என,  காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஸஹரானின் வாகன சாரதியான காத்தான்குடி 3 மீன் மார்க்கெட் வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய முகமது சரீப் ஆதம் லெப்பை கபூர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு காவல்துறையின் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

ஸஹரானின் வாகன சாரதியான கபூரிடமிருந்து கைத் துப்பாக்கி மற்றும் லப்டொப் ஆகியன மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் திடுக்கிடும் பல இரகசிங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

தான் ஸஹரானின் வாகன சாரதியாக 35 ஆயிரம் ரூபா சம்பளத்திற்கு வேலை செய்ததாகவும் கடந்த நவம்பர் மாதம் 19 திகதி வவுணதீவு காவல்துறை சோதனை சாவடியில் இருந்த காவல்துறை உத்தியோகத்தரை கத்தியால் தானே குத்தி கொலை செய்துள்ளதாகவும் நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் தொடர்பான திட்டங்களை வகுக்கும்போது தான் உடனிருந்ததாகவும் கல்முனை – சாய்ந்தமருதில் அடுத்த தற்கொலை தாக்குதல் தொடர்பாக திட்டமிட்டபோது அங்கும் தான் இருந்ததாகவும் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மாவீரர் நாட்களை அண்டிய காலத்தில் இட்மபெற்ற இந்த தாக்குதல் தொடர்பலி் சந்தேக நபர்களாக முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #VavunathivuPoliceattack #eastersundayattacklk #Kattankudy

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More