Home இலங்கை பரந்தனில் இனம் தெரியாதவர்களால் வீசப்பட்டுள்ள குண்டு வெடிக்கவைப்பு

பரந்தனில் இனம் தெரியாதவர்களால் வீசப்பட்டுள்ள குண்டு வெடிக்கவைப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கிளிநொச்சி பரந்தன் பகுதியின் நான்காம் வீதியில் காணப்பட்ட குண்டு ஒன்று இராணுவத்தினரால் வெடிக்கவைக்கப்பட்டுள்ளதுடன்பரந்தன் சிவபுரம் பகுதியில் வீதியில் வீசப்பட்டிருந்த ரவைகளும் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

நாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்களை தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக தங்களது வீட்டில் பதுக்கி வைத்திருந்த குண்டு மற்றும் ரவைகளை இனம் தெரியாத நபர்கள் வீதியில் வீசி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

#paranthan #bomb #army

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More