Home இலங்கை வவுணத்தீவு கொலைகள் – முன்னாள் போராளியை விடுவிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

வவுணத்தீவு கொலைகள் – முன்னாள் போராளியை விடுவிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by admin


மட்டக்களப்பு வவுணத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டினால் கொல்லப்பட்ட இரண்டு காவல்துறையினரின் படுகொலைகள் தொடர்பில் கைதான முன்னாள் போராளி அஜந்தனை விடுவிப்பதாக ஜனாதிபதி தன்னிடம் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில், குறித்த காவல்துறையினரை கொலை செய்தது தேசிய தௌஹீத் ஜமா அத்தின் மொஹமட் சஹ்ரான் குழுவினர் என தெரிய வந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அப்பாவியான நான்கு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற அஜந்தனை விடுவிக்குமாறு அமைச்சர் மனோ கணேசன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, அவரை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பதில் காவல்துறை மாஅதிபருக்கும், சட்டமா அதிபருக்கும் பணிப்புரை விடுப்பதாக தன்னிடம் ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளதாக மனோககேணசன் தனது முகப் புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் அஜந்தனின் மனைவியான செல்வராணி ராசகுமாரனுக்கு அமைச்சர் மனோ கணேசனின் அலுவலகம் அறிவித்துள்ளதாகவும் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#vavunatheevu #manoganesan #president #ajanthan #ltte

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More