Home இலங்கை முல்லைத்தீவில் தனியார் விடுதியிலிருந்து ஒரு தொகுதி உபகரணங்கள் மீட்பு :

முல்லைத்தீவில் தனியார் விடுதியிலிருந்து ஒரு தொகுதி உபகரணங்கள் மீட்பு :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் புதிதாக கட்டுமானப்பணிகள் இடம்பெறும் தனியார் விடுமத ஒன்றில் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது உபகரணங்கள் ஒருதொகுதி மீட்கப்பட்டுள்ளது.

இன்று 01.05.19 காலை முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள 59 ஆவது படைப்பிரிவினர் அளம்பில் பகுதியில் உள்ள புதிதாக கட்டுமானப்பணிகள் இடம்பெறும் தனியார் விடுதி ஒன்றில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது தொலைத்தொடர்பு கருவி உள்ளிட்ட பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

அளம்பில் பகுதியில் இயங்கிவந்த தனியார் விடுதி; ஒன்று படையினரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.இதன்போது பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இன்றி பாவனைக்கு உட்படுத்திய பொருட்களை படையினர் மீட்டுள்ளார்கள்.

இதன்போது இராணுவ சப்பாத்து 2சோடி,கமா சீருடை1,ஜக்கட் ஒன்று,தொலைபேசி சிம் அட்டைகள் ,கத்தி ஒன்று,தொலைநோக்கி கருவி ஒன்று,தொலைத்தொடர்பு கருவிகள் 9 என்பன படையினரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு காவல்துஐறயினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு காவல்துறையினர் இது தொடர்பில்  சட்டநடவடிக்கையினை முன்னெடுத்துவருவதாக தெரிவித்துள்ளார்கள் #mullaitheevu #roundup #army #uniform #mobilesim

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More