Home இந்தியா உத்தரகாண்ட் மாநிலத்தில் தலித் வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்

உத்தரகாண்ட் மாநிலத்தில் தலித் வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்

by admin

உத்தரகாண்ட் மாநிலத்தில உயர் சாதியினர் அருகே அமர்ந்து சாப்பிட்டதால் தலித் வாலிபர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார் .  உத்தரகாண்ட் மாநிலம் தெக்ரி மாவட்டத்தில் நைன்பாக் டெக்சில் கிராமத்தை சேர்ந்த 23 வயதான ஜிதேந்திரதாஸ் என்னும் வாலிபரே இவ்வாறு அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்

உறவினரது திருமண விழாவில் உயர் சாதியினருக்கு என தனியாக உணவு பரிமாறப்பட்ட இடத்தில் அவர்கள் அருகே அமர்ந்து ஜிதேந்திரதாசும் உணவு அருந்தியமையினால் ஆத்திரமடைந்த உயர் சாதியினர் ஜிதேந்திரதாசை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிதேந்திர தாசை அடித்துக் கொன்றவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ள ட ஜிதேந்திர தாசின் உறவினர்கள் வழக்கை வாபஸ் பெறும்படி சிலர் தம்மை தொடர்ந்து மிரட்டுவதாக தெரிவித்துள்ளனர்

#murder #india

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More