Home உலகம் மெக்சிகோவில் தனியார் விமானம் விழுந்து விபத்து – 14 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

மெக்சிகோவில் தனியார் விமானம் விழுந்து விபத்து – 14 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

by admin

மெக்சிகோவில் தனியார் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் , அதில் பயணித்த 14 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மெக்சிகோவின் மான்டிரே நகருக்கு 14 பேருடன் புறப்பட்டுச் சென்ற தனியார் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானம், கோகுய்லா வான்பகுதியில் பறந்தபோது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதையடுத்து விமானத்தை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன .

இதனையடுத்து , விமானம் காணாமல் போன பகுதியினை அதிகாரிகள், ஹெலிகொப்டரில் சென்று ஆய்வு செய்தபோது, விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன. அது காணாமல் போன விமானத்தின் பாகங்களை ஒத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தநிலையில் அதில் பயணித்த 14 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

#dead  #jetcrash #Mexico

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More