Home இலங்கை NTJயின் இரண்டு முக்கியஸ்த்தர்கள், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றனர்…

NTJயின் இரண்டு முக்கியஸ்த்தர்கள், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றனர்…

by admin


உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்திய, தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் அடிப்படைவாத அமைப்பின் முக்கியஸ்தர்கள் என கருதப்படும் இரு பயங்கரவாதிகள் வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்று அங்கு தலைமறைவாக இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த இருவரும் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இருந்து செயற்பட்டிருக்க வேண்டும் என நம்பும் விசாரணையாளர்கள், அவர்கள் இருவரையும் கைது செய்து இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டம் வகுத்துள்ளதாகவும், அது தொடர்பில் இராஜதந்திர மட்ட செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்புபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பின்னணியில் செயற்பட்ட அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக இவ்விருவரும் கைது செய்யப்படவுள்ளனர். அத்துடன், தடை செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் எனும் அடிப்படைவாத அமைப்பின் பல முக்கியஸ்தர்கள் சிக்கியுள்ள நிலையில் விசாரணைகள் தொடர்வதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நெறிப்படுத்தியதாக நம்பப்படும் தற்கொலை குன்டுதாரிகளில் ஒருவரான மொஹம்மட் சஹ்ரான் ஹாஷிமின் மிக பிரதான சகாக்களுக்கு சொந்தமான தெமட்டகொட மஹவில கார்டன் வீடு முற்றாக குற்றப்புலனாய்வுத் துறையினரின் பொறுப்பின் கீழ் கொன்டுவரப்பட்டுள்ளது. குறித்த வீட்டிலும் தற்கொலை தககுதல்கள் நடாத்தப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் தெமட்டகொடை காவற்துறையினரிடம் இருந்து குற்றப்புலனாய்வுத் துறை விசாரணைகளைப் பொறுப்பேற்று, நேற்று கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. இதன்போதே வீட்டை பொறுப்பேற்றதாக குற்றப்புலனாய்வுத் துறையினர் நீதிவானுக்கு தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு குற்றப்புலனாய்வுத் துறையால் பொறுப்பேற்கப்பட்ட சொகுசு வீடானது, சஹ்ரானுடன் ஷங்ரில்லா ஹோட்டலில் தாக்குதல் நடாத்திய மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் இல்ஹாம் மற்றும் சினமன் ஹோட்டலில் தாக்குதல் நடத்­திய மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் இன்சாப் ஆகியோர் வசித்த, அவர்களது தந்தையான பிரபல கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் இப்ராஹீமுக்கு சொந்தமானதாகும். மொஹம்மட் இப்ராஹீம் உள்ளிட்ட 19 பேர் தெமட்டகொடை குன்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வுத் துறையின் மனிதப் படுகொலைகள் குறித்த விசாரணைப் பிரிவில் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக நேற்று (07.05.19) மன்றில் முன்னிலையான குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரி நீதிவானுக்கு அறிவித்தார்.

இந்த நிலையில் தெமட்டகொடை தாக்குதலில் இறந்தவர்களின் டி.என்.ஏ. சோத­னைகள் ஊடாக மரண விசாரணைகளை துரிதப்படுத்த உத்தரவிட்ட நீதிவான் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான வழக்ககை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார். #NTJ #eastersundayattacklk #CID #shahranhashim #suicidebomber #Zahran Hashim

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More