Home இலங்கை அம்பாந்தோட்டையிலும், ஏழு தற்கொலை குண்டுதாரிகள்….

அம்பாந்தோட்டையிலும், ஏழு தற்கொலை குண்டுதாரிகள்….

by admin

File photo

அம்பாந்தோட்டையில் ஏழு தற்கொலை குண்டுதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காத்தான்குடியைச் சேர்ந்த தேசிய தௌஹீத் ஜமாத் உறுப்பினர்களான இவர்கள், நன்கு பயிற்சி பெற்றவர்கள் எனவும்,   இந்த  ஏழுபேரையும் கடந்த திங்கட்கிழமை  கைது செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹரான் ஹாசிமின் நெருங்கிய உதவியாளர்களெனவும் சஹரானின் சகோதரர்களில் ஒருவரே, இவர்களை அம்பாந்தோட்டைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட மொஹமட் நசார் மொஹமட் ஹசாத் இவர்களுக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளன. #suicidbomber  #NTJ #eastersundayattacklk #CID #shahranhashim #suicidebomber #ZahranHashim

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More