Home இலங்கை வவுனியா வைத்தியசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்! விசாரணைகள் ஆரம்பம்!

வவுனியா வைத்தியசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்! விசாரணைகள் ஆரம்பம்!

by admin

வவுனியா பொது வைத்தியசாலைக்கு வெடி குண்டுத்தாக்குதல் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாதோரின் கடிதம் ஒன்றின் மூலம் இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று மாலையிலேயே இவ்வாறு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் உள்ள உணவகத்தின் மேசையில் பணிப்பாளருக்கு முகவரியிடப்பட்ட கடிதம் ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டது.

வைத்தியசாலையின் பணியாளர் ஒருவர் குறித்த கடிதத்தை அவதானித்து பணிப்பாளரிடம் வழங்கியுள்ளார். அதில் வவுனியா பொது வைத்தியசாலைமீது குண்டு தாக்குதல் நடத்தவுள்ளதாக எழுதப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த கடிதம், வவுனியா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் குறித்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். #vavuniyahospital

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More