Home இலங்கை மன்னாரில் கைக்குண்டை வெடிக்க வைக்க முயற்சித்தவர் கைது-

மன்னாரில் கைக்குண்டை வெடிக்க வைக்க முயற்சித்தவர் கைது-

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் நேற்று புதன் கிழமை (15) இரவு குடும்பத் தகராறு காரணமாக கைக்குண்டுடன் சென்று குண்டை வெடிக்க வைக்க முயற்சித்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (16) காலை மடு காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக தந்தைக்கும் மகனுக்கு இடையே வாய்த் தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.

இதையடுத்து வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்ற தந்தை சற்று நேரத்தின் பின்னர் மறைத்து வைக்கப்பட்ட புதிய கைக்குண்டு ஒன்றினை எடுத்து வீட்டுக்குச் சென்று வெடிக்க வைக்க முயற்சி செய்துள்ளார்.

குறித்த சம்பவத்தை அவதானித்த அப்பகுதி ஊடகவியலாளர் ஒருவர் இச்சம்பவத்ததை தடுத்து நிறுத்தியுள்ள நிலையில் அப்பகுதி மக்களும் கிராம அபிவிருத்திச்சங்கமும் உடனடியாக மடு காவல்துறையினருக்கு தகவல் வழங்கின.

இதனையடுத்து இன்று அதிகாலை பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் தேடுதல் சோதனை மேற்கொண்ட பாலம்பிட்டி 317 ஆவது படையினர் கைக்குண்டை எடுத்து வந்த 55 வயதுடைய பெரிய பண்டிவிரிச்சான் பகுதியைச் சேர்ந்த நபரைக் கைது செய்துள்ளதுடன் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது மறைத்து வைக்கப்பட்ட கைக்குண்டையும் மீட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு,கைது செய்யப்பட்ட குடும்பஸ்தர் மடு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#மடு  #பெரியபண்டிவிரிச்சான்  #கைக்குண்டு  #madu #handbomb #arrest

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More