Home இந்தியா ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவிவிலகியுள்ளார்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவிவிலகியுள்ளார்

by admin

ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்துள்ளதனையடுத்து அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பதவிவிலகல் கடிதத்தை ஆளுனரிடம் கையளித்துள்ளார்

ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.ஆர்.எஸ். காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்நிலையில், இன்றிரவு ஆளுனர்; நரசிம்மனை சந்தித்த முதலவர்; சந்திரபாபு நாயுடு தனது பதவிவிலகல கடிதத்தை அவரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும் தேர்தலின்போது கடுமையாக உழைத்த கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் ஆந்திராவின் முதல்வராக பதவியேற்கவுள்ள ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஒடிசா முதல்வராக மீண்டும் பதவியேற்கவுள்ள நவீன் பட்நாயக் ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

#ஆந்திரமுதல்வர்  #சந்திரபாபுநாயுடு #பதவிவிலகியுள்ளார் #ஒடிசா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More